இணையத்தளம் (ஒன்லைன்) ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ள நிலையில் பிரபல கருத்தோவியர் அவந்த ஆர்டிக்கல  வரைந்த கருத்தோவியம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


 "அத" எனும் சிங்கள ஊடகத்தில் வெளியான குறித்த கருத்தோவியத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 


இதேவேளை ஒன்லைன் ஓடர் மூலம் மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியமைக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.