புதுக்குடியிருப்பு பகுதியில் வீட்டு வளாகத்தில் குண்டு வெடித்ததில் வயோதிபர் ஒருவர் காயமடைந்துள்ளார். புதுக்குடியிருப்பு இரணைப்பாலை 05 ஆம் வட்டாரப்பகுதியில் வீட்டுகாணியினை துப்பரவு செய்து தீ மூட்டியபோது குண்டு வெடித்துள்ளது.


இதன்போது 66 அகவையுடைய வயோதிபர் ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.